1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 18 மார்ச் 2021 (15:18 IST)

அதுல்யா ரவியிடம் 18+ கேள்வி கேட்ட தொகுப்பாளர்… அவர் சொன்ன பதில்!

நடிகை அதுல்யா ரவி சமீபத்தில் ஒரு யுடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்த போது கேட்கப்பட்ட கேள்விகளால் சங்கடத்துக்கு ஆளாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய "ஏமாளி" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதையடுத்து வெளிவந்த காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பின்னர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நாடோடிகள்2, மற்றும் எஸ்.வி சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகிய "கேப்மாரி" படத்திலும் நடித்திருந்தார். இப்போது ஒரு சில படங்களில் அவர் நடித்து வந்தாலும், மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு யுடியூப் சேனலுக்கு அவர் நேர்காணல் அளித்தார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் ‘நீங்க முதலில் பார்த்த பிட்டு படம் எது?’ எனக் கேட்க அதற்கு அதுல்யா ரவி ‘பிட்டு படம்னு இல்லை… இந்தி பாடலான ஆஷிக் பனாயா என்ற பாடலைதான் பார்த்தேன்’ எனக் கூறியுள்ளார்.