வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 3 மே 2017 (14:52 IST)

இந்த நடிகருடன் மீண்டும் மீண்டும் நடிக்க விரும்பும் அனுஷ்கா!!

பாகுபலி திரைப்பட இயக்குனர் ராஜமெளலி மற்றும் கதாநாயகி அனுஷ்கா பேஸ்புக் லைவ் சாட்டில் பங்கேற்றனர். அப்போது படத்தை பற்றி அனுஷ்கா சில செய்திகளை பகிர்ந்து கொண்டார். 


 
 
அனுஷ்கா கூறியதாவது, பாகுபலி படத்தில் அமரேந்திர பாகுபலியுடன் காதல் காட்சிகளில் நடித்து விட்டு, பின்னர் மகேந்திர பாகுபலியின் தாயாய் நடித்தது கொஞ்சம் சவாலாகவும் கஷ்டமாகவும் இருந்தது. ஆனால் இதை நான் ராஜமெளலியின் ஊக்கத்தால் சிறப்பாக செய்து முடித்துள்ளேன்.
 
மக்களோடு மக்களாய் திரையரங்கில் மூன்று முறை சென்று படத்தை பார்த்துவிட்டு வந்தேன். படத்தில் எங்கேயும் அனுஷ்காவை என்னால் காண முடியவில்லை தேவாசேனா என்னும் கதாபாத்திரத்தை மட்டுமே காண்கிறேன். இதற்கு முக்கிய காரணம் எனது வடிவமைபாளர்களான ராம ராஜமெளலி மற்றும் பிரசாந்தினி.
 
இனி பிரபாஸுடன் மீண்டும் மீண்டும் மீண்டும் நடிக்க ஆவளாய் உள்ளேன் என தெரிவித்தார் அனுஷ்கா.