வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 1 மார்ச் 2021 (11:48 IST)

நான் விவாகரத்து செய்த போது யாரும் ஆதரிக்கவில்லை… நடிகை அமலா பால் பதில்!

நடிகை அமலா பால் தனது முதல் திருமணம் தோல்வியில் முடிந்தது குறித்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

இதையடுத்து இப்போது தொடர்ச்சியாக துணிச்சலான மற்றும் சர்ச்சையானக் கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடித்து வரும் முதல் கணவரை விவாகரத்து செய்தது ஏன் என பேசியுள்ளார். அதில் ‘நான் முன்னணி நடிகையாக இருந்தபோதும் பயத்துடனே வாழ்ந்து வந்தேன். விவாகரத்து முடிவை எடுத்தபோது யாரும் என்னை ஆதரிவிக்கவில்லை. பயமுறுத்தவே செய்தனர்.’எனக் கூறியுள்ளார்.