செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 12 ஜூன் 2019 (15:56 IST)

அஜித் நடிக்கும் இந்திப்படம் – மாஸான பாலிவுட் எண்ட்ரி !

அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வைக்குப் பிறகு உருவாகும் படம் தமிழ்- இந்தி என இருமொழிகளில் எடுக்கப்பட இருக்கிறது.

அஜித்தின் 59 ஆவது படமான 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு  வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அஜித்தோடு வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் அஜித்- ஹெச் வினோத் காம்போவில் உருவாகும் அடுத்த படத்தையும் போனி கபூரே தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தில் அஜித் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரேஸ் வீர்ராக நடிக்க இருக்கிறார். மேலும் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இந்தப் படம் நேரடியாக தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாக இருக்கின்றன.

பைக் ரேஸை மையமாக வைத்து உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் வெளிநாடுகளில் நடக்க இருக்கிறது. சமீபகாலமாக அஜித் நடிக்கும் படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு தொலைக்காட்சிகளில் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.