படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு போராட்டத்தில் குதித்த அஜீத்..
வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் அஜீத், அதை ரத்து செய்து விட்டு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இன்று நடைபெறும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளார்.
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் மற்றும் பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகமெங்கும் உள்ள மாணவர்கள் கடந்த சில நாட்களாக தீவிரமான போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
நடிகர் சங்கம் தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் நடிகர் அஜீத் கலந்து கொள்வதில்லை. எனவே, அவர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், பல்கேரியா நாட்டில் படப்பிடிப்பில் இருந்த அஜீத், நேற்று சென்னை திரும்பினார். மேலும் இன்று காலை தனது மனைவியுடன் அவர் நடிகர் சங்கம் நடத்தும் போராட்டத்தில் கலந்து கலந்து கொண்டார்.