வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : வியாழன், 6 ஜூலை 2017 (21:27 IST)

5 ஹீரோயின்கள் நடிப்பில் தயாராகும் படம்

மித்ரன் இயக்கும் அடுத்த படத்தில், 5 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.


 

 
‘மீண்டும் ஒரு காதல் கதை’ படத்தை இயக்கிய மித்ரன், தன்னுடைய அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார். இம்முறை, 5 ஹீரோயின்களை வைத்து பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படத்தை இயக்கப் போகிறார். ஃபேமிலி டிராமாவுக்குப் பெயர்பெற்ற மித்ரன், இந்தமுறை த்ரில்லரைக் கையில் எடுத்திருக்கிறார்.

“ஸ்கிரிப்ட் வேலைகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளன. விரைவில் நடிகைகளைத் தேர்வுசெய்து, ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் போக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார் மித்ரன். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது இந்தப் படம். ஷோபா ராணி, இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.