1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: திங்கள், 7 ஏப்ரல் 2014 (12:35 IST)

விஜய் ஹேப்பி... சிம்புதேவனும் ஹேப்பி

முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் கத்தி முடிவடைந்ததும் சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். காமெடிக்கு முக்கியத்துவம் தந்து இந்த கதையை சிம்புதேவன் எழுதியுள்ளார். 
சென்ற வாரம் சிம்புதேவனின் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படம் வெளியானது. அருள்நிதி, பிந்து மாதவி நடித்திருந்த இந்தப் படம் எப்படி ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதை அறிய விஜய்க்கு ஆவல். சிம்புதேவன் இயக்கத்தில் அவர் நடிக்கயிருக்கும் படம் எப்படி வரும், எப்படி வரவேற்கப்படும் என்பதற்கு ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் ஒரு முன்னோட்டம். படம் நன்றாக இருந்தால், ஓடினால்... சரியான இயக்குனரை தேர்வு செய்துள்ளோம் என திருப்திப்பட்டுக் கொள்ளலாம்.
கன்னியும் காளையும் விஜய்க்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. படத்தை ரசித்துப் பார்த்தார் விஜய். குறிப்பாக திரைக்கதை அவரை அதிகம் கவர்ந்தது. சிம்புதேவனையும், படக்குழுவையும் மனம் திறந்து பாராட்டினார். படம் விஜய்யை மகிழ்ச்சிப்படுத்தியது போல், விஜய்யின் பாராட்டு சிம்புதேவனுக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
 
இருவருமே ஹேப்பி.