1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: புதன், 4 ஜூன் 2014 (20:09 IST)

கடவுள் பாதி மிருகம் பாதி வதந்தி மீதி

நடிகை பூஜா திருமணம் செய்து கொண்டார் என அவர் ஓர் இளைஞனுடன் நிற்கும் படத்தை இணையதளங்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தின. பூஜா அந்த இளைஞனின் மீது சாய்ந்தபடி கையில் மாலையுடன் நின்று கொண்டிருந்தார்.
 
பூஜா பெங்களூருவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார் என இரண்டு வருடங்களுக்கு முன் பரபரப்பு கிளம்பியது. அன்றிலிருந்து இன்றுவரை பலமுறை மீடியாக்கள் பூஜாவுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளன. அதனால் இந்த லேட்டஸ்ட் திருமணம் குறித்து நாம் கவலைப்படவில்லை. இந்நிலையில் குறிப்பிட்ட புகைப்படம் குறித்து பூஜா விளக்கமளித்துள்ளார்.
 
இணையதளங்கள் வெளியிட்ட அந்தப் புகைப்படம் கடவுள் பாதி மிருகம் பாதி படத்துக்காக எடுக்கப்பட்டது. பூஜாவுடன் நின்று கொண்டிருப்பது படத்தின் ஹீரோ. பெயர் ராஜ். பூஜாவின் கல்லூரி நண்பன். நான் ஒரு படம் நடிக்கிறேன். எனக்கு ஜோ‌டியாக நடிக்க முடியுமா என்று ராஜ் கேட்டதால் கடவுள் பாதி மிருகம் பாதி படத்தில் நடித்தாராம் பூஜா. அந்தப் புகைப்படத்தை வைத்து திருமணம் என்று வதந்தி கிளப்பிவிட்டார்கள் என பூஜா தெரிவித்துள்ளார்.
 
இப்படியே வதந்தி கிளம்பிக் கொண்டிருந்தால் பூஜா நிஜமாக திருமணம் செய்யும் போது அதை வதந்தி என்று ஊடகங்கள் எழுதப் போகின்றன.