தொடர்புடைய செய்திகள்
- அமாவாசை தினத்தில் குலதெய்வ பூஜை செய்வதால் ஏற்படும் நன்மைகள்...!
- வீட்டில் பணபற்றாக் குறையை தீர்க்க எளிய பரிகாரங்கள்!
- கடவுளுக்கு செய்யும் அபிஷேகங்களுக்கு முக்கியத்தும் கொடுப்பது ஏன் தெரியுமா...?
- எதிர்மறை சக்திகளை விரட்டும் கோவில் மணி ஓசை...!
- மனது நம் கட்டுப்பாட்டிற்குள் வைக்க தியான பயிற்சி அவசியமா...?
நீரில் மிதக்கும் விஷ்ணு கோயில் எங்குள்ளது தெரியுமா...!
நேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோவில். இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால், கிட்டதட்ட 14 அடியில் உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை எப்படி இவளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.
பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும் நாம் பார்த்திருப்போம். அனால் மனிதர்களை போல் மல்லாக்க படுத்துக்கொண்டு 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கிறது பெருமாள் சிலை.
7 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது. இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும் இதற்கான அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் தினமும் நடந்தவண்ணமே உள்ளன. நீரில் மிதக்கும் இந்த விஷ்ணுவின் அருளை பெற பக்தர்கள் எப்போதும் இங்கு வந்துகொண்டே இருக்கின்றனர்.
அடுத்த கட்டுரையில்
