1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. Let's see about the specialties of Pradosa worship !!

பிரதோஷ கால வழிபாட்டின் சிறப்புக்கள் பற்றி பார்ப்போம் !!

பிரதோஷ
பிரதோஷ காலம் என்பது திரயோதசித் திதியில் மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ள காலம் ஆகும். பிரதோஷத்தில் சனி பிரதோஷத்தில் மிகவும் விஷேஷம்.


சோமசூத்திர பிரதட்சணம்: இந்தக் காலத்தில் ஈசனின் சந்நிதியை "சோமசூத்திர பிரதட்சணம்" செய்வது என்பது மிகவும் விசேஷம். இதன் அடிப்படையில், நந்தி பகவானை தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திருப்பி வரவேண்டும்.

நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று வலமாக சென்று கோமுகி எனப்படும் சிவபெருனின் அபிஷேக நீர் வரும் துவார வழியே தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வர வேண்டும்.

நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து வலமாக வர வேண்டும். திரும்பவும் கோமுகியை தரிசனம் செய்து மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து திரும்பி வரவேண்டும். இதற்கு ‘சோமசூத்திர பிரதட்சணம்’ என்று பெயர். இதனை பிரதோஷ காலத்தில் மட்டுமே செய்ய வேண்டும்.

ஆத்ம பிரதட்சணம்: பிரதோஷ காலத்தில் நந்தியை தரிசனம் செய்த பின்னரே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும். அதுவே விதி. சோமசூத்திர பிரதட்சணம் செய்த பின்னர் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு 'ஆத்ம பிரதட்சணம்' செய்ய வேண்டும். இதனால் செய்த பாவங்கள் விலகி நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இப்படியாகப் பிரதோஷ காலங்களில் கோயில் சுற்றுகையில் முதலில் சண்டிகேஸ்வரர் வரை, பிறகு தீர்த்த தொட்டி வரை என மாறி, மாறி சுற்றுவதன் மூலம் மீண்டும் பிறவா வரம் கிடைக்கப்பெறும். மோட்சம் சித்திக்கும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
சனி பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாட்டு பலன்கள் !!