1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சிலவகை விநாயகரின் வடிவங்கள் பற்றி பார்ப்போம் !!

யோக கணபதி: செஞ்சூரியன் நிறத்தில், நீல நிற ஆடையை தரித்த இவர், பாசம், அட்சமாலை, யோகதண்டம், கரும்பு ஆகியவைகளைத் ஏந்தி, யோக நிலையில் தோற்றமளிக்கிறார்.

துர்க்கா கணபதி
பசும் பொன் நிறத்தில் இருக்கும் துர்கா கணபதி,தன் 8 திருக்கரங்களில் அங்குசம், பாசம், பாணம், அட்சமாலை, தந்தம், வில், கொடி, நாவற்பழம் ஆகியவற்றைத் தாங்கி பெரிய உருவத்துடன் காணப்படுபவர்.
 
சங்கட ஹர கணபதி
இளஞ்சூரியன் நிறத்தில், தன் இடது தொடையில் நீல நிற பூவை ஏந்திய தேவியை வைத்திருப்பார். நீல நிற ஆடை அணிந்து, செந்தாமரை பீடத்தில் அமர்ந்து வரத முத்திரையுடன், அங்குசம், பாசம், பாயசக் கிண்ணத்தினைத் தாங்கி அருள் பாலிப்பவர்.
 
விக்ன கணபதி :
தங்க நிறத்தை உடைய விக்ன கணபதி, தனது 10 திருக்கரங்களில் சக்கரம், சங்கு, கோடாரி, ஒடிந்த தந்தம், பாணம், கரும்பு வில், பூங்கொத்து, புஷ்ப பாணம், பாசம், மாலை ஆகியவற்றுடன் காணப்படுகின்றார்.
 
ஹேரம்ப கணபதி
ஐந்து முகங்களை கொண்ட ஹேரம்ப கணபதி, தனது 10 கரங்களில் இரண்டு அபய மற்றும் வரத முத்திரையோடும், இதர கரங்களில் பாசம், பரசு, சம்மட்டி, தந்தம், மாலை, அட்சமாலை மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார்.
 
லட்சுமி கணபதி
வெள்ளை நிறத்தில் இருக்கும் லட்சுமி கணபதி, நீல நிற தாமரைப் பூவை தனது கையில் ஏந்தி, இரு தேவிகளுடன் காணப்படுவார். தனது 8 திருக்கரங்களில் கலசம், அங்குசம், பாசம், கற்பகக் கொடி, கட்சம், வரதம், கிளி, மாதுளம் பழம் ஆகியவற்றை கொண்டிருப்பார்.
 
மகா கணபதி
செந்நிற திருமேனியுடன் காணப்படும் மகா கணபதி, 10 கைகளையும், மூன்று கண்களையும், ட்தன் முடியில் பிறைச்சந்திரனும் உடையவர். தாமரை மலரை ஏந்திய தேவி, இடது தொடையில் தேவியை அமரவைத்து, தனது கையால் அனைத்து இருப்பார். மற்ற கரங்களில் கதை, கரும்பு, வில், சக்கர, பாச, தந்தம், ரத்ன கலசம், நெற்கதி, நீலோத்பலம், மாதுளை ஆகியவற்றை ஏந்தி இருப்பார்.
 
விஜய கணபதி
பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்திருக்கும் விஜய கணபதி, பாசம், அங்குசம், ஒடிந்த தந்தம், மாம்பழம் ஆகியவற்றை தன் 4 கரங்களில் ஏந்தியிருப்பார்.