1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கரூர்: மாசி மாதம் தேய்ப்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

மாசி மாதம் தேய்பபிறை அஷ்டமியை முன்னிட்டு கரூர் அருள் மிகு ஸ்ரீ கல்யாணபசுதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹாதீபாரதனை நடைபெற்றது. நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பண்டைய கால வரலாறு பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாகவும், சிவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல் பெற்ற கொங்கு ஏழுஸ்தலங்களில் முதல்தளமாக அருள்மிகு கரூர் ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் சுயம்பு மூர்த்தியாக ஸ்வாமி  பக்தர்களுக்கு காட்சியத்து வருகிறார். 
 
ஆலயத்தில் உள்ள காலபைரவருக்கு மாதம் தோறும் வரும் தேய்ப்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு சிறப்பு அபிஷேகம் மற்றும் பக்தர்களால் கொடுக்கப்பட்ட மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படட்து, தொடர்ந்து மஹாதீபாரதனை காட்டப்பட்டது.
 
முன்னதாக காலபைரவருக்கு பால், தயிர், அரிசி மாவு, தேன், வெள்ளம், மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு  சிறப்பு அபஷேகம் நடைபெற்றது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நீர்பூசணியில் விளக்கேற்றி தங்களுடைய நேர்த்தி  கடனை செலுத்தினார்.