தொடர்புடைய செய்திகள்
- ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் சிறப்பு வாய்ந்த திருமஞ்சனம் !!
- குபேர விளக்கை எந்த கிழமையில் ஏற்ற உகந்தது தெரியுமா...?
- காமதேனு சிலையை வீட்டில் வைத்து வழிபாடு செய்வதால் உண்டாகும் நன்மைகள் !!
- ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள் என்று தெரிந்துக்கொள்வோம் !!
- ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்களும் பலன்களும் !!
தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள் !!
உலகில் எங்கும் நீக்கமற நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின் வடிவில் நிறைந்திருக்கிறார் இறைவன். இவற்றுள் நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது.
அவ்வாறு ஞானத்தை வழங்கும் வடிவமான இறைவனை விளக்கு என்னும் தீபத்தினை ஏற்றி நாம் வழிபாடு செய்வது சாலச் சிறந்தது ஆகும். இதனையே புராணங்களும் இதிகாசங்களும் வலியுறுத்துகின்றன.
தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான இலட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே தான் கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன.
தீபமானது வீட்டில் பூஜை அறை, சமையலறை, துளசி மாடம், முற்றம் போன்றவற்றிலும், கோவில்கள், தொழில் நிறுவனங்கள், கல்விகூடங்கள் என எல்லா இடங்களிலும் ஏற்றப்படுகிறது.
வீடுகளில் தீபத்தை பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது நல்லது. அதே போல் மாலையில் பிரதோச வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவதும் சிறந்த பலன்களைக் கொடுக்கும். கோவில்களில் எந்த நேரமும் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளலாம்.
அடுத்த கட்டுரையில்
