1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. Anyone get Pitru Dosham; How to know if there is...?

யாருக்கெல்லாம் பித்ரு தோஷம் ஏற்படும்...?

பித்ரு தோஷம்
ஒருவர் முறைப்படி பித்ரு கடன்களை செய்யாமல் இருந்தால், குடும்பத்தில் மனக் கஷ்டம், பணக்கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய நமது முனோர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டர். 
 
றந்தவருக்கு செய்யவேண்டிய பிண்டம் இடுதல் இறந்தவரின் திதிதோறும் அவருக்குரிய கடமைகளை செய்தல், போன்றவற்றை செய்யாமல் இருக்கும்போது இறந்தவரின் ஆன்மா பசி, தாகம் போன்றவற்றால் அவதிப்படும்.
 
அவ்வாறு அவதிப்படும்போது, அந்த அவதியின் கொடூரங்கள் அவரது சந்ததியினரை விட்டு வைக்காது. அவர்களையும் பாதிப்படைய வைக்கும். இதைத்தான் பித்ரு தோஷம் என்று கூறுவார்கள்.
 
ஒருவர் நல்லவனாகவும், தெய்வ பக்தி மிகுந்தவனாக இருந்து இறந்தால், இறந்தவருக்கு பித்ரு கடன்களை சரியாக செய்யாவிட்டாலும்  இறந்தவரின் குடும்பத்திற்கு பித்ரு தோஷம் கண்டிப்பாக ஏற்படும். ஆனால் அதன் தாக்கம் சற்று குறைவாக இருக்கும். காரணம் பித்ருக்களுக்கு  இறைவனின் ஆசி இருப்பதால் தோஷத்தின் தீவிரம் சற்று குறைவாக இருக்கும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
பூஜையின்போது கடைப்பிடிக்கவேண்டிய சில ஆன்மிக சம்பிரதாயங்கள்!!