வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 20 நவம்பர் 2018 (16:01 IST)

கஜா புயல் பாதிப்பிற்காக ஒரு தமிழராக வைரமுத்து என்ன செய்தார்...?

தமிழ்நாட்டையே சில தினங்களுக்கு முன் உலுக்கியதோடல்லாமல் ,  வேளாண் நிலத்தை வாரி எடுத்து பயிர்களை நாசமாக்கி விவசாயக் குடிகளின் வாழ்க்கையை பாதித்த இந்த பேரழிவிற்க்காக பலரும் மனிதாபிமான அடிப்படையில் நிதிஉதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு நடிகர்கள் கட்சி தலைவர்கள் போன்ற பலரும் 8 மாவட்ட மக்களுக்கு பொருள் வீடு வாசல் அற்று நிராதரவாய் நிற்கின்றவர்களுக்கு பேருதவி புரிந்து வருகின்றனர்.
 
தற்போது கவிஞர் வைரமுத்து கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக ரூ. 5 லட்சம் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.