தொடர்புடைய செய்திகள்
- விஜய் ஆண்டனி - அர்ஜுன் நடிக்கும் ‘கொலைகாரன்’
- விஜய்யிடம் ரஜினி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் - கொளுத்திப் போடும் அமீர்
- சில பேரு வெயிட் பண்ணி துண்டு துண்டா ஆக்கிடுவாங்க! கமல் குறிப்பிடுவது யாரை?
- தூத்துக்குடிக்கு லேட்டா வந்ததுக்கு மன்னிச்சுடுங்க - பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் விஜய்
- விஜய்க்கு நன்றி கூறிய பலியானவர்களின் குடும்பத்தினர்
தங்கை வீட்டிற்கு சென்ற தளபதி விஜய்: நெகிழ்ச்சியில் ஸ்டண்ட் சில்வா
சமீபத்தில் நடந்த தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களில் ஒருவர் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா அவர்களின் தங்கை கணவர். இதனை ஸ்டண்ட் சில்வா தனது டுவிட்டரில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். இதனையறிந்த பலரும் சில்வாவுக்கு ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் நேற்றிரவு தளபதி விஜய் தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களின் 13 பேர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுடைய உறவினர்களுக்கு ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் நிதியுதவியும் செய்தார். அவ்வாறு ஆறுதல் பெற்று நிதியுதவி பெற்றவர்களில் ஒருவர் ஸ்டண்ட் சில்வாவின் தங்கையும் ஆவார்.
இதுகுறித்து ஸ்டண்ட் சில்வா தனது டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் கூடிய ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: எங்கள் வீட்டிற்கு வந்து எங்களின் துக்கத்தை தன் துக்கமாக நினைத்து பகிர்ந்து கொண்டு என் தங்கைக்கு மனமாற ஆறுதல் அளித்துச் சென்ற அன்பு அண்ணன் இளையதளபதி விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி' என்று கூறியுள்ளார்.
எங்கள் வீட்டிற்கு வந்து எங்களின் துக்கத்தை தன் துக்கமாக நினைத்து பகிர்ந்து கொண்டு என் தங்கைக்கு மனமாற ஆறுதல் அளித்துச்சென்ற அன்பு அண்ணன் இளையதளபதி விஜய் @actorvijay அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
அடுத்த கட்டுரையில்
