1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 14 ஏப்ரல் 2018 (13:50 IST)

தீக்குளித்த வைகோவின் உறவினர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மீம்ஸ்களால் மனமுடைந்து தீக்குளித்த வைகோவின் உறவினரான சரவணன் சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சமூக வலைதளங்களில் வைகோ ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ ஆலையினரிடம் பணம் வாங்குவதற்காக தான் இந்த போராட்டத்தை நடத்துகிறார் என்று மீம்ஸ் வெளியானது. இதனால் மனமுடைந்த வைகோவின் மருமகன் சரவணன் சுரேஷ், வைகோவிடம் சென்று பல ஆண்டுகளாக ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி வரும் உங்களைப் பற்றி அவதூறு பரப்பி மீம்ஸ் வெளியிடுகிறார்கள் என வேதனையோடு தெரிவித்துள்ளார். அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றுள்ளார் வைகோ.
 
இதனையடுத்து சரவணன்  சுரேஷ் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். 100% சதவீதம் தீக்காயங்களுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது இந்த முடிவிற்கு நாம் தமிழர் கட்சியினர் போட்ட மீம்ஸ்களை மனம் உடைந்தே என் உறவினர் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டான் என வைகோ கூறினார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணன் சுரேஷ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.