1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 25 ஜூலை 2020 (11:22 IST)

மறைக்கப்பட்ட மரணங்கள் - பார்ட் 2?? விடாமல் அடிக்கும் உதயநிதி!

தமிழக அரசை விமர்சித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
நேற்று தமிழகத்தில் 6,785 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 199,749 ஆக உயர்ந்துள்ளது.  
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 6,785 பேர்களில் 1,299 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,206 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் தமிழகத்தில் நேற்று கொரோனாவுக்கு 88 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்துள்ளது.  அதோடு தமிழகத்தில் 6,504 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். 
 
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக என்றும் இல்லாத வகையில் கொரோனா 6,000 -  7,000 என பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், 
 
மாவட்டங்களில் தொற்று பரவும் வேகத்தைப் பார்த்தால், சென்னையில் 444 மரணங்களை மறைத்ததை போலவே, அங்கும் கொரோனா உயிரிழப்புகளை மறைத்து, உடல்களை உறவினர்களிடம் கொடுத்திருப்பார்களோ என்ற அச்சம் எழுகிறது. ‘மாவட்டங்களில் மறைக்கப்பட்ட மரணங்கள்’ என அடிமைகள் மீண்டும் காதை சொறிந்தாலும் சொறியலாம் என பதிவிட்டுள்ளார். 
 
சமீபகாலமாக உதயநிதி ஸ்டாலின் அரசியல் ரீதியாக மறைமுகமாக பேசாமல் பல நேரடி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.