வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (18:55 IST)

தமிழகத்தில் இன்று மட்டும் 105 கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒருசில நாட்கள் அதிகரித்தும் ஒருசில நாட்கள் குறைந்தும் வரும் நிலையில் இன்று திடீரென தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1477 அதிகரித்துள்ளது
 
இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், 10 பேர் தஞ்சையை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் மட்டும் மொத்தம் 285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும் இன்று தமிழகத்தில் எந்தவித உயிரிழப்புகளும் இல்லை என்பது ஒரு ஆறுதலான செய்தி என்பதும், இன்று மட்டும் கொரோனோவில் இருந்து 46 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் ஒரு திருப்தியான தகவல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  தமிழகத்தில் இதுவரை 40,776 பேர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்பதும் தற்போது 1057 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது