1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 1 ஜூன் 2022 (07:59 IST)

இலங்கையில் இருந்து அகதிகளாக தனுஷ்கோடி வந்த குடும்பம்!

refugee srilanka
இலங்கையில் இருந்து அகதிகளாக தனுஷ்கோடி வந்த குடும்பம்!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதும், அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு உள்ளன என்பதும் தெரிந்ததே
 
இதனை அடுத்து இலங்கையில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் அகதிகளாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர் 
தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை 80 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்துள்ள நிலையில் இன்று மேலும்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அகதிகளாக வந்து உள்ளனர் 
 
இலங்கையிலிருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடி வந்துள்ளதாகவும் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன