1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 7 பிப்ரவரி 2022 (15:57 IST)

திமுக அரசு ஒரு சர்வாதிகார அரசு - எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகராட்சி தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில்,  இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிந்துள்ளது. ஏற்கனவே திமுக,  அதிமுக, ம.நீ.ம., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி    விருதுநகரில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது,  ''கடந்த 8 மாதங்களாக  திமுக அரசு  எந்தத்  நலத் திட்டங்களையும் செய்யவில்லை என  தெரிவித்துள்ளார்.

மேலம்,  திமுக அரசு சர்வாதிகார அரசு அதில்  நியாயம் எதிர்பார்க்க முடியாது எனவும், தமிழகத்தை ஒரு பொம்மை முதலமைச்சர் ஆட்சி செய்கிறார் ''எனத் தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு இன்று தான் இடைசி நாள் என்ற தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.