1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 16 டிசம்பர் 2014 (16:35 IST)

6ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை - பள்ளி மாணவர்களிடம் விசாரணை

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே 6 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
 
வேலூர் மாவட்டம்  குடியாத்தம் அருகே உள்ள முனுகம்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் மகள் கீர்த்திகா (11). இவர் மாச்சனூர் அரசு மேல்நிலை பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கீர்த்திகா நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவர், மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
 
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், கீர்த்திகாவின் பள்ளி தோழிகள், உறவினர்கள் வீடுகளில் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், இன்று கல்யாண பெரியாங்குப்பம் என்னும் இடத்தில் உள்ள மாந்தோப்பில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் கீர்த்திகா சடலமாக கிடந்துள்ளார்.
 
கீர்திதிகாவின் தலையில் அடிபட்டு இரத்தம் வழிந்த நிலையில் கிடந்துள்ளார். அருகே மது பாட்டில்கள் தண்ணீர் பாக்கெட்டுகளும் கிடந்துள்ளன. மேலும் மாணவியின் சைக்கிள், புத்தகப் பை ஆகியவையும் அந்த தோப்பில் கிடந்தது.
 
தகவல் கிடைத்ததும் கீர்த்திகாவின் பெற்றோர் மற்றும் கே.வி.குப்பம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி கீர்த்திகாவை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் பள்ளி மாணவர்களே இந்த கொலையை செய்திருப்பார்கள் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.