1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 நவம்பர் 2022 (15:36 IST)

சதுரகிரியில் செம மழை; இந்த மாதமும் அனுமதி இல்லை! – பக்தர்கள் ஏமாற்றம்!

sathuragiri
தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருவதால் இந்த மாதமும் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாதம்தோறும் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது.

இந்த மாதம் கார்த்திகை அமாவாசை, சிவராத்திரி வருவதால் நவம்பர் 21 (நாளை) முதல் 24ம் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாளை முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர், வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை மற்றும் ஆற்று பகுதிகள், ஊற்றுகளில் தண்ணீர் பெருக்கு அதிகரித்து வருவது ஆகியவற்றின் காரணமாக நாளை முதல் 24ம் தேதி வரை பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K