வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 22 ஜனவரி 2021 (10:35 IST)

அம்மா தைரியமா இருங்க நாங்க இருக்கோம் - சசிகலாவுக்கு தொண்டர்கள் ஆறுதல் குரல்!

சசிகலாவுக்கு தொண்டர்கள் ஆறுதல் குரல்...!
 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் அவர் வரும் 27 ஆம் தேதி தண்டனை முடிந்து விடுதலையாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தன.   
 
இதனிடையே திடீரென சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு  கொண்டுசெல்லப்பட்டார். தற்போது அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மேலும் அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,  நிமோனியா காய்ச்சல், ரத்த அழுத்தம், நீரிழவு, தைராய்டு போன்ற பிரச்னைகளும் உள்ளது என விக்டோரியா அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் தற்போது சசிகலாவை கொரொனா வார்டிற்கு மாற்றம் செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அப்போது அவரை மருத்துவமனை வெளியில் இருந்து பார்த்த தொண்டர்கள், அம்மா நீங்க தைரியமா இருங்க.. நாங்க இருக்கோம் என ஆதரவு குரல் கொடுத்து அவரை தைரியப்படுத்தினர்.