தொடர்புடைய செய்திகள்
- சேகர் ரெட்டி டைரி: இ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்பட 12 பேருக்கு வருமான வரித்துறை சம்மன்
- சோனு சூட் ரூ.20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு - 3 நாள் ரெட்டில் அம்பலம்
- முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு
- சசிக்கலா தண்டிக்கப்பட்டதால் அபராதத்தை விட முடியாது! – வருமான வரித்துறை கறார்!
- வருமானவரி தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு! – வருமான வரித்துறை அறிவிப்பு!
பச்சையப்பாஸ் துணிக்கடையில் ஐடி ரெய்ட்!!
காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பாஸ் துணிக்கடையில் வரி ஏய்ப்பு புகாரின் பெயரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
கடந்த 1926 ஆம் ஆண்டு பச்சையப்ப முதலியார் என்பவரால் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டது பச்சையப்பாஸ் துணிக்கடை. காஞ்சிபுரம் மட்டுமின்றி சென்னை மற்றும் வேலூரில் இதன் கிளைகள் உள்ளது.
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், வேலூரில் இந்த துணிக்கடை மற்றும் அதை சார்ந்த நிதி நிறுவனங்கள் உள்பட 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இக்கடை மீது வரி ஏய்ப்பு புகார் வந்ததன் பெயரில் சுமார் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
