வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2018 (15:50 IST)

அதிமுகவை கைப்பற்றும் தினகரன்; ஏப்ரலுக்குள் குடியரசுத்தலைவர் ஆட்சி!

ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்றுவார் எனவும், தமிழகத்தில் ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் குடியரசுத்தலைவர் ஆட்சி அமையும் எனவும் டிராஃபிக் ராமசாமி கூறியுள்ளார்.
 
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பல்வேறு பொதுநல வழக்குகள் தொடர்ந்து பிரபலமானவர். இவர் மக்கள் பாதுகாப்பு கழகம் என்ற ஒரு அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் 5-ஆம் ஆண்டு விழா கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது.
 
இதில் கலந்துகொண்டு பேசிய டிராஃபிக் ராமசாமி, தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாகவும், வரும் ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமையும் என்றும் கூறினார்.
 
மேலும், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன் தன்னம்பிக்கையும் தைரியமும் உடையவர். அவர் விரைவில் அதிமுகவைக் கைப்பற்றுவார் என்றார் டிராஃபிக் ராமசாமி.