1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 20 மார்ச் 2020 (21:00 IST)

பிற மாநில வாகனங்கள் தமிழகம் வர தடை ...அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் அனுமதி... தமிழக அரசு

பிற மாநில வாகனங்கள் தமிழகம் வர தடை ...அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் அனுமதி... தமிழக அரசு அறிவிப்பு !
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவும் மெல்ல பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. நேற்று வரை 166 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 223  ஆக உயர்ந்துள்ளது.
 
அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில்,கொரோனாவால் இன்று மட்டும் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிறது.
 
இதனிடையே, இத்தாலியை சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் ராஜஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் இந்த கொரோனா வைரஸில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமெனில் அனைவரும் வரும் 22 ஆம்தேதி வீட்டிலேயே இருக்கும் படி,சுய ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி நேற்று அறிவுறுத்தியிருந்தார்.
 
இந்நிலையில், கேரள, கர்நாடக, ஆந்திர மாநில எல்லைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது . எனவே நாளை முதல் மார்ச்  சரக்கு வாகனங்கள், குறைந்த அளவில் வெளிமாநில அரசு பேருந்துகள் தமிழகத்திற்குள்  அனுமதிக்கப்படும் , பால் ,பெட்ரோல், டீசல்,காய்கறி கொண்டு வரும் வாகனங்களுக்கும், மருந்துகள், ஆம்புலன்ஸ், கேஸ், சிலிண்டர் போன்ற அத்தியாவசிய வாகனங்களுக்கு  விலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
மேலும், தவிர்க்க இயலாத காரணங்கள் துக்கநிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு பங்கேற்க செல்வோர் வாகங்கள் அனுமதிக்கபடும் என தெரிவித்துள்ளது.
 
மார்ச் 22ல் மணல் லாரிகளும் இயங்காது என மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்வராசாமணி தகவல் தெரிவித்து குறிப்பிடத்தக்கது.