வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 3 அக்டோபர் 2019 (20:37 IST)

பில்லி.. சூனியம் ? வயதானவர்களின் பல்லை உடைத்த பெண்கள் ! நடந்தது என்ன ?

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் சில மாதங்களாக 3 பெண்கள் இறந்ததுள்ளனர். இதனையடுத்து 7 பேர் தொடர்ச்சியாக மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதே கிராமத்தில் வசித்து வந்த 6 முதியவர்களின் மீது அங்குள்ள மக்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. அதனால் அவர்களின் வீடுகளுக்குச் சென்ற பெண்கள் பொருட்களை அடித்து உதைத்துவிட்டு. அவர்கள் ஆறு பேரையும் சாலைக்கு இழுத்து வந்தனர். பின்னர் அவர்களின் பல்லைப் பிடுங்கினர். முதியவர்கள் வலியால் கதறினர்.
 
பின்னர். பாதிக்கப்பட்ட  முதியவர்களை, சிலர்  அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், மொத்தம் 22 பெண்கள் மற்றும் 7 ஆண்களைக்  கைது செய்துள்ளனர்.இந்த சம்பவக் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.