1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (15:48 IST)

பத்திரிக்கை தொழிலில் இறங்கும் லைகா நிறுவனம்!

லைகா நிறுவனம் தமிழகத்தில் ஒரு அரசியல் புலனாய்வு ஊடகத்தைத் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இங்கிலாந்தில் முன்னணி தொழில் முனைவோராக லைகா நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஷ்கரன் உள்ளார். அவர் தமிழில் கத்தி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதன் பின்னர் லைகா நிறுவனம் பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களைத் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இப்போது தமிழகத்தில் ஒரு அரசியல் புலனாய்வு ஊடகத்தைத் தொடங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டுவருவதாக சொல்லப்படுகிறது.