வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 14 டிசம்பர் 2016 (16:47 IST)

ஜெ.வின் ரகசியங்கள் ஒரு கருவியில் இருக்கிறதா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கையில் எப்போதும் ஒரு கருவி இருக்கும் எனவும், அதில் சில முக்கிய ரகசியங்களை அவர் பாதுகாத்து வந்ததாகவும் சமீபத்தில் ஒரு செய்தி பரவியது.


 

 
உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன், அவர் பென் டிரைவர் போல் ஒரு கருவியை தன்னுடன் வைத்திருந்ததாகவும், அதில் அவரின் சொத்துக்கள் பற்றிய விவரங்கள் மற்றும் பல கோடி மதிப்புள்ள அதிமுக-வின் அசையா சொத்துக்களை, அவரின் மறைவுக்குப் பின் யார் நிர்வகிக்க வேண்டும் என்ற தகவல்கள் அதில் அடங்கியுள்ளது என கூறப்பட்டது.
 
அது அவர் விரும்பிக் கேட்கும் பாடல்கள் அடங்கிய கருவி என்று சிலர் கூறினாலும், அதில் சில  முக்கியமான ஆவணங்கள், தனக்கு விசுவாசமான யாரிடம் இருக்கிறது என்கிற தகவலும் அதில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும், சினிமா பாடல்கள் கொண்ட ஒரு பகுதியில் பாஸ்வேர்ட் பாதுகாப்போடு அந்த தகவல்கள் இருக்கிறது எனவும் கூறப்பட்டது.
 
அந்த கருவி பற்றிய தகவலை யாருக்கும் தெரியாமல் ஜெ. பாதுகாத்து வருவதாகவும், அந்த கருவியை ஒரு மூன்றெழுத்து பெயர் கொண்ட ஒரு வேலைக்காரப் பெண்ணிடம் அவர் கொடுத்துள்ளதாகவும், அப்பல்லோவில் மயக்கம் தெளிந்து நினைவு திரும்பியவுடன் ஜெ. விசாரித்தது அந்த கருவியைப் பற்றித்தான் எனக்கூறப்பட்டது.
 
இந்த தகவல் சில உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட, அந்த வேலைக்காரப் பெண்னை தேடினார்கள் என்றும் ஆனால் அவர் மாயமாகி விட்டார் என்றும் சில தகவல்கள் வெளியானது.
 
ஆனால், இவை அனைத்தும் வதந்திகள் என்றும், சசிகலாவை பிடிக்காதவர்கள் இப்படி கற்பனையான வதந்திகளை பரப்பி வருகிறார்கள் எனவும் சசிகலாவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.