1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

தமிழர்களை போல் போராட கற்றுக்கொள்ளுங்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

sn ramana
தமிழர்களை போல் போராட கற்றுக்கொள்ளுங்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
தமிழர்களைப் போல் போராடக் கற்றுக் கொள்ளுங்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மொழிக்கான உரிமைகளை பெறுவதில் தமிழர்களைப் போல் யாராலும் போராட முடியாது என்றும் தமிழர்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு தெலுங்கர்கள் அனைவரும் தங்கள் மொழிக்காக ஒன்றுபட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.என்.ரமணா அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
ஐதராபாத்தில் நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் மொழிக்காக பல ஆண்டுகள் போராடி வருகிறார்கள் என்பதும் தமிழர்களின் மொழிப்பற்று இந்தியாவில் உள்ள அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது