தொடர்புடைய செய்திகள்
- கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. 5 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை..!
- 28 ஊழியர்களை பணி நீக்கம்..! Google நிறுவனம் அதிரடி..! எதற்காக தெரியுமா..?
- ட்ரோன்களை கொண்டு ஹிஸ்புல்லா தாக்க முயற்சி.. முறியடித்த இஸ்ரேல்.. போர்ப்பதட்டம்..!
- ராகுல் காந்தி நாளை தமிழகம் வருகை..! ட்ரோன்கள் பறக்கத் தடை..! பலத்த பாதுகாப்பு...!!
- ஜெமினி AI: சுந்தர் பிச்சை ராஜினாமா செய்ய நெருக்கடியா? என்ன பிரச்னை?
தமிழ்நாட்டில் பிக்சல் செல்போன்களை தயாரிக்க திட்டம்: கூகுள் நிறுவனம் பேச்சுவார்த்தை..!
தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனம் பிக்சல் ஃபோன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த பேச்சு வார்த்தையை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் மொபைல் போன் சந்தை மிகவும் பிரகாசமாக இருப்பதை அடுத்து அந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாட்டில் அதிக அளவில் கூகுள் பிக்சல் செல்போன்களை தயாரிக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ட்ரோன்களை தயாரிக்க கூகுள் நிறுவனம், ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் அதிகாரிகள் அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் நிர்வாகிகளை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது .
இதனை அடுத்து தமிழ்நாட்டில் தனது கூகுள் பிக்சல் போன் மற்றும் ட்ரோன்களை தயாரிக்க கூகுள் நிறுவனம் ஆலோசனை செய்து வருவதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனம் தமிழ்நாட்டில் பிக்சல் ஃபோன்கள், ட்ரோகளை தயாரித்தால் அதிக அளவில் வேலை வாய்ப்பு பெருகும் என்றும் இதன் காரணமாக தமிழ்நாடு தொழில் துறையில் முன்னேறும் என்றும் புறப்பட்டு வருகிறது.
Edited by Siva
