1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 16 செப்டம்பர் 2021 (16:23 IST)

சிறுமி வன்கொடுமை..குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 6 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்ட குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஹைதராபாத்தில்  6 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், ராஜீ என்ற இளைஞர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளி ராஜூவை தேடி வந்தனர். சுமார் 3000 போலீஸார் தலைமறைவான ராஜூவை தேடி வந்த நிலையில், மதுக்கடைகள் முன்பு 2200 போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. எனவேகுற்றவாளி ராஜு குறித்து துப்புக் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று ராஜீ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது