1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 ஜூலை 2020 (11:08 IST)

விசாரணை வளையத்தில் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்

தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் சிபிசிஐடி இன்று விசாரணை. 

 
சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவிலான கவனத்தை பெற்றுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தலையீட்டின் பெயரில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது.
 
அதன்படி இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினரையும் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக ஐஜி சங்கர் தெரிவித்தார். 
 
அதன்படி  தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 5 போலீசாரை காவலில் எடுத்து விசாரிப்பது பற்றி சிபிசிஐடி இன்று முடிவு. மேலும், சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் சிபிசிஐடி இன்று விசாரணை.