செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: தேனி , செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (13:52 IST)

வனப்பகுதியில் வன விலங்குகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட இரண்டு வனத்துறை பணியாளர்களை- காட்டுமாடு முட்டியதில் பலத்த காயம்!.

தேனி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கண்ணகி கோவில் மற்றும் விண்ணேற்றிப் பாறை வனப்பகுதியில் கூடலூர் வனத்துறை அலுவலக பணியாளர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  
 
இதில் ஒரு குழுவாக வனகாப்பாளர் பூபதி வனவர் மாசானம் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் சுமன் ஆகிய மூன்று பேரும் கண்ணகி கோவில் வனப்பகுதியில் உள்ள வரையாடுகளை கணக்கெடுப்பதற்காக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
 
அப்போது அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு மாடு ஒன்று அவர்களை எதிர்பாராத விதமாக முட்டி தாக்கியதில்  வனவர் பூபதி மற்றும் வேட்டை தடுப்பு காவலர் சுமன் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
 
அவர்கள் இருவர் மீதும் காட்டு மாடு முட்டி  பலத்த காயம் அடைந்ததை சக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து தகவல் அறிந்த வனத்துறையினர் கேரளா வனத்துறையினரின் உதவியோடு கேரள மாநில  வனப்பகுதி வழியாக ஜீப் வாகனம் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.
 
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற இருவரும் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
வனவிலங்குகளை கணக் கெடுப்பதற்காக சென்ற வனத்துறை பணியாளர்கள் இரண்டு பேரை காட்டுமாடு முட்டி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றது.