புதன், 18 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2024 (09:22 IST)

செல்போனுக்கு சார்ஜ் போட்டபோது விபரீதம்! மின்சாரம் பாய்ந்து பெண் பலி!

Death

சேலத்தில் செல்போனுக்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சேலம் மாவட்டம் சின்ன திருப்பதியில் உள்ள அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் கௌதம். இவருடைய மனைவி ராதா. நேற்று காலை ராதா தனது செல்போனை வழக்கம் போல சார்ஜ் போட்டுள்ளார். அப்போது அவரை எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

 

உடனடியாக ராதாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ராதாவை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரிய வந்துள்ளது. ராதாவின் இழப்பால் அவரது குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர்.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ராதாவுக்கு மின்சாரம் தாக்கியது செல்போன் சார்ஜர் மூலமாகவா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K