வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Alagesan
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2016 (15:35 IST)

ஜனவரி 12-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு நடிகர் தனுஷுக்கு நீதிமன்றம் உத்தரவு

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என மேலூரைச் சேர்ந்த தம்பதி உரிமை கொண்டாடும் நிலையில், 2017-ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு நடிகர் தனுஷுக்கு மேலூர் குற்றயவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


 
 
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என உரிமை கொண்டாடிவருகின்றனர். 
தனுஷின் உண்மையான பெயர் கலைச்செல்வன் எனக் கூறும் அந்த தம்பதி, தனுஷ் திருப்பத்தூரில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது நடிக்கும் ஆசையில் சென்னை வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் தனுஷிடம் இருந்து ஜீவனாம்ச பெற்றுத் தருமாறு மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கதிரேசன் மீனாட்சி தம்பதி மனுத் தாக்கல் செய்திருந்தனர். 
மனுவை விசாரித்த நீதிமன்றம், 2017-ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகர் தனுஷுக்கு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.