தொடர்புடைய செய்திகள்
- ஆளுநர் ஆர்.என்.ரவி செய்திருப்பது அதிகார முறைகேடு!- சீமான்
- ''செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை'' - சபாநாயகர் அப்பாவு
- யூரியாவுக்கான மானியம் 2025 ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு- பிரதமருக்கு நன்றி கூறிய அண்ணாமலை
- அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது- முதல்வர் முக. ஸ்டாலின்
- சொந்த கட்சி போஸ்டரை கிழித்த பாஜகவினர்…
கரூரில் நாளை பாஜக பொதுக்கூட்டம்.. நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு..!
கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நாளை பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில் மனுதாரரின் மனு உரிய காரணம் இல்லாமல் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததும், எதிர்கட்சியினர் பொதுமக்களிடம் கருத்து தெரிவிப்பதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது. எதிர்கட்சியும், சில ஆண்டுகள் கழித்து ஆளும் கட்சியாக மாறும்போது இதே வேலையை தான் செய்கிறது. கருத்துக்களை வெளிப்படுத்துவதை எந்த வகையிலும் முடக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran
