1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2016 (12:21 IST)

நடிகர் ராம்கியால் எனது உயிருக்கு ஆபத்து: கல்லூரி மாணவி புகாரால் பரபரப்பு

நடிகர் ராம்கியால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று கல்லூரி மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

வேலூர் மாவட்டம் அரக்கோணம் பழனிபேட்டை குருசாமி வீதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பரது மகள் ஸ்மிர்த்தி(வயது 19). இவர் ஈரோடு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பி.இ. படித்து வரும் நான், ஜிம் பயிற்சியாளரும், ஓட்டல் ஊழியருமான வெங்கடேஷ் என்பவரை காதலித்தேன். எங்கள் காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரிய வந்ததை அடுத்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து கடந்த 18ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி, எனது காதலர் வெங்கடேஷுடன் சென்று ஈரோடு பெரியார் மன்றத்தில் சுய மரியாதை திருமணம் செய்து கொண்டோம். அதை சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைபடி பதிவு செய்துள்ளோம். எனது காதல் திருமணத்திற்கு என் பெற்றோர்கள் மட்டுமின்றி எனது தாய் மாமாவும் நடிகருமான ராம்கிக்கும் பிடிக்கவில்லை. இதனால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.