1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai Nellai vandhe bharth train from sep 24

சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத்: தேதி அறிவிப்பு

சென்னை
சென்னை மற்றும் நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த ரயில் இயக்கப்படும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
ஏற்கனவே சென்னை - கோவை மற்றும் சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல் படி சென்னை - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் நெல்லை ரயில் நிலையத்தில் தென்னக கோட்ட ரயில்வே மேலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
அடச்சீய்...இவரைப்போன்ற அறிவிலிகளை எப்படி சினிமா மேடைகள் பொறுத்துக் கொள்கின்றன? -அந்தனன்