வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 2 மே 2018 (11:57 IST)

காவிரி விவகாரம் - ஆளுனரிடம் திரைத்துறையினர் மனு

அறவழிப்போராட்டத்தின் போது, நிறைவேற்றப்பட்ட தீர்மானப் படிவத்தை திரைத்துறையினர் தமிழக ஆளுனரிடம் அளித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், நடிகர் சங்கம் சார்பில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அறவழிப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது காவிரி விவகாரம் தொடர்பான தீர்மான நிறைவேற்றப்பட்டது. 5000 பேர் கையெழுத்திட்ட தீர்மான படிவத்தை, திரைத் துறையினர் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்திடம் இன்று அளித்தனர்.
ஆளுனரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த நாசர், ஆளுனர் காவிரி விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்றும் இன்னும் 2 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என தெரிவித்தார் என நாசர் கூறினார்.