1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 10 நவம்பர் 2020 (16:32 IST)

2 வாரத்திற்கு மட்டும் புது படம்: பாரதிராஜா!

VPF கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2 வாரத்திற்கு மட்டும் புதிய திரைப்படங்களை வெளியிட முடிவு. 
 
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே விபிஎஃப் கட்டணத்தை செலுத்துவது குறித்து எழுந்துள்ள பிரச்சினை முடிவடையாத நிலையில் உள்ளது.
 
இன்று திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில் இன்று நடத்தப்பட்ட இருதரப்பு பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் புதிய படங்கள் வெளியாகாது என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பழைய படங்களையே திரையிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் க்யூப் நிறுவனம் நவம்பர் மாதம் முழுவதும் விபிஎப் கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடி வழங்கியுள்ளது. இந்த சலுகை திரையரங்குகளில் வெளியாகும் அனைத்து புதிய திரைப்படங்களும் பொருந்தும் என அறிவித்துள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து, VPF கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2 வாரத்திற்கு மட்டும் புதிய திரைப்படங்களை வெளியிட முடிவு என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.