வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

5 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீரென இடமாற்றம்: பரபரப்பு தகவல்

தமிழகத்தில் புதிய ஆட்சி ஏற்பட்டதில் இருந்து பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
 
இதுகுறித்து தமிழ்நாடு அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் தொழிலாளர் நல ஆணையராக முனியநாதன், தொழில்துறை சிறப்பு செயலாளராக நியமனம் லில்லி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
 
தொழில் வழிகாட்டி ஏற்றுமதி மேம்பாட்டு பிரிவு மேலாண்மை ஆணையராக பூஜா குல்கர்னி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சாலை திட்ட இயக்குனராக கணேசன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனராக சங்கீதா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.