வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 23 அக்டோபர் 2020 (10:38 IST)

அனுமதியின்றி தாடி வளர்த்த காவலர் பணியிடை நீக்கம்! உத்தரபிரதேசத்தில் சர்ச்சை!

உத்தர பிரதேசக் காவல்துறையில் உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி தாடி வளர்த்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள ரமலா காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவர் இன்தஸார் அலி . இவர் அனுமதி பெறாமலே நீண்ட தாடி வளர்த்தமைக்காக இன்தஸார் அலியை மாவட்ட எஸ்பியான அபிஷேக்சிங் பணியிடை நீக்கம் செய்துள்ளார். இது பற்றிய செய்திகள் வெளியாகி சமூகவலைதளங்களில் விவாதத்தை உருவாக்கியுள்ளன.