1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (11:38 IST)

விவாதம் இல்லாமல் சட்டம் நிறைவேற்றப்படுவதில் வருத்தம்! – உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து!

நாட்டில் புதிதாக நிறைவேற்றப்படும் சட்டங்கள் மீது போதிய விவாதம் நடத்தப்படுவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில் கொரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் பேசிய அவர் “விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் இயற்றுவது வருத்தமளிக்கிறது. போதுமான விவாதங்கள் நடைபெறாததால் சட்டத்தின் உள்நோக்கங்களை புரிந்து கொள்ள முடியவில்லை” என கூறியுள்ளார்.

முன்னதாக நீதிபதி என்.வி.ரமணா நீதிபதிகளுக்கு நாட்டில் போதிய பாதுகாப்பு இல்லை என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.