1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 1 ஜூலை 2020 (15:54 IST)

2000 பேரை பணிக்கு எடுக்க பிரபல வங்கி முடிவு

இந்தக் கொரோனா காலத்தில் பலரும் சிரமத்துடன் வாழ்ந்து வரும் நிலையில், இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பாரத ஸ்டேட் பேங்க் வங்கி 2000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

கிராமங்களில் கடன் திட்டங்கள் மற்றும் கடன் அட்டைகள் உள்ளிட்ட வர்த்தகங்களுக்காக சுமார் 2000 பேரை புதிதாகப் பணியில் அமர்த்த இருப்பதாக ஸ்டேட் பேங்க் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகிறது.

இதற்காக இளநிலை மற்றும் மத்திய மட்டத்திலான பணி நியமனங்கள் அடுத்த 6 மாதங்களில் நடத்தப்ப்படும் எனவும், வங்கி செயல்பாடுகளிலும், வேளான் கூட்டமைப்புகளிலும் அனுபவம் உள்ளவர்களுக்கு இந்தப் பணியில் சேர முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.