1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 14 மார்ச் 2016 (21:38 IST)

14 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு

உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூர் சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 14 பேருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.


 

 
ஒவ்வொரு வருடம் கான்பூர் சிறையில் உள்ள கைதிகளுக்கு எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல் இந்த வருடம் பிப்ரவரி 26ஆம் தேதி தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகளுக்கு அந்த சோதனை செய்யப்பட்டது.
 
அதில் ஒரு பெண் கைது உட்பட மொத்தம் 14 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருபது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு இந்த நோய் இருக்கிறதா என்று சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.