1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By மகேந்திரன்
Last Modified: திங்கள், 28 ஜூன் 2021 (12:58 IST)

பவுடர் வடிவ கொரோனா மருந்து… சந்தைக்கு வருகிறது!

பவுடர் வடிவ கொரோனா மருந்து சந்தைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீரில் கலந்து குடிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள பவுடர் வடிவ 2டிஜி கொரோனா தடுப்பு மருந்து விற்பனைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸுடன் இணைந்து டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2டிஜி கரோனா தடுப்பு மருந்தைத் தண்ணீரில் கலந்து நோயாளிகள் குடிக்கலாம்.  இது உடலில் சென்று பாதிக்கப்பட்ட செல்களை ஒருங்கிணைத்து புதிய செல்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும். வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கிறது. முதல் கட்டமாக 10 ஆயிரம் டோஸ்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது என தெரிகிறது.