1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 8 ஆகஸ்ட் 2015 (15:40 IST)

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் - தலைமை ஆசிரியருக்கு அடி உதை

அரசுப்பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியரை பொதுமக்கள் வகுப்பறையில் வைத்து தாக்கியுள்ளனர்.
 
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் கோவிந்தம்பள்ளி ராகவேந்திரா காலனியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இதில் ராமச்சந்திரா என்பவர் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
 
இவர் கடந்த ஓராண்டாக மாணவிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து வெளியே சொன்னால் தேர்வில் பெயில் ஆக்கி விடுவேன் என்று தொடர்ந்து மாணவிகளை மிரட்டியுள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று 5ஆம் வகுப்பு மாணவியிடம் ராமச்சந்திரன் அத்துமீறி நடந்து கொண்டதை 4 மாணவிகள் பார்த்துள்ளனர்.
 
இதைத் தொடர்ந்து அவர்கள் பள்ளியை விட்டு வெளியேறி அருகில் வசிப்பவர்களிடம் கூறி உள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கு திரண்ட பொதுமக்கள் மாணவியை மீட்டுள்ளனர். மேலும் தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கி வகுப்பறையில் வைத்து பூட்டியுள்ளனர். பின்னர், தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த தலைமை ஆசிரியரை கைது செய்துள்ளனர்.