1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 7 ஜூன் 2017 (14:16 IST)

மனித முகத்துடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி!!

மனிதர்களை போல முகத்துடன் பிறந்த கன்றுக்குட்டியை  உத்தரபிரதேசத்தில் உள்ள மக்கள் தெய்வமாய் வணங்க துவங்கினர்.


 
 
உத்தரபிரதேச மாநிலத்தின் பசு ஒன்று கன்று ஈன்றது. அந்த கன்றுக்குட்டி மனித முகதுடன் பிறந்துள்ளது. 
 
மனிதர்களை போல கண், மூக்கு, காது அமைப்புடன் கன்றுக்குட்டியின் தோற்றம் இருந்தது. 
இதனால் பொதுமக்கள் அந்த கன்ருக்குட்டியை மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கருதி கோயிலில் வைத்து வளர்க்க விரும்பினார்கள். 
 
ஆனால், அந்த கன்றுக்குட்டி ஒரு சில மணி நேரங்களிலேயே  உயிரிழந்தது. இருப்பினும் கடவுள் நம்பிக்கை மாறாத மக்கள் கன்றுகுட்டிக்கு அங்கேயே கோவில் கட்டப்படும் என்றும் கூறியுள்ளனர்.